articles

img

ஆபத்தான நோய்களின் அறிகுறிகள் என்ன

      நம் உடலில் பொதுவாக நோய்கள் ஏற்படும் போது வெளிப்படையாக சில அறிகுறிகள் தோன்றும். ஆனால் சில உடல் நலப்பிரச்சனைகள் எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கும். இந்த நோய்கள் தங்களுக்கு இருப்பதே பலருக்கும் தெரியாது. இந்த வகை நோய்கள் “சைலண்ட் கில்லர்ஸ்” (Silent KIllers) என்று அழைக்கப்படுகின்றன. அந்த நோய் பெரி தாகும் நிலைக்கு வரும்போது அறிகுறிகள் அடிக்கடி தோன்றும். இதனால் அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது கடினமாக மாறும். சிக்கல்களை மேலும் அதிகமாக்கும்.

      சைலண்ட் கில்லர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய்கள் காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கணைய புற்று நோய் ஆகியவை இவற்றில் முக்கியமானவை. இந்த நோய்களுக்கு எப்பொழுதும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றாது. என்றாலும், சில சமயங்களில் அதன் அறிகுறிகளை அறிந்துகொள்வது சரியான நேரத்தில் கண்டறிய உதவும்.  

உயர் ரத்த அழுத்தம்  

     உயர் ரத்த அழுத்தம் இதய நோய் முதல் பக்கவாதம் வரையிலான இருதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள பலரும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த நிலை இருந்தால் நீங்கள் உடல்நிலை சரியில்லா மல் அல்லது நோய்வாய்ப்பட்டதாக உணர வேண்டிய அவசியமில்லை. கவனம் செலுத்த வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தத்திற்கு சில அறிகுறிகள் உள்ளன. மங்கலான பார்வை, மூக்கில் இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல், மார்பு வலி, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவை அதன் அறிகுறிகளில் அடங்கும். அதனால் இந்த அறிகுறிகள் தோன்றினால். உங்கள் மருத்துவரிடம் இருந்து தெளிவான நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற உங்கள் ரத்த அழுத்த அளவைப் பரிசோதிக்கவும்.